வருக வணக்கம்

Sunday, February 22, 2009

சீமான் ஜாமீன் பெறுவதில் சிக்கல்!




விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசியதாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாகவும் இயக்குனர் சீமான் புதுவை போலீசாரால் கைது செய்யப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலாக காலாப்பட்டில் உள்ள மத்திய சிறையில் நேற்று அடைக்கப்பட்டார்.

இதற்கிடையில் இயக்குனர் சீமானை கோர்ட்டு மூலம் நாளை ஜாமீனில் எடுக்க பெரியார் தி.க. வக்கீல்கள் முடிவு செய்திருந்தனர். ஆனால் சென்னை ஐகோர்ட்டில் நடந்த மோதல் பிரச்சினையால் தமிழகம் மற்றும் புதுவை கோர்ட்டுகளுக்கு நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை விடப்பட்டுள்ளது.

மேலும் வக்கீல்களும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளனர். இதனால் சீமானுக்கு ஜாமீன் மனு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நன்றி
நக்கீரன்

No comments:

சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

மனதை மயக்கும் பழையபாடல்