க.அருணபாரதி
இலங்கை அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போருக்கு இந்தியா உதவுவதைக் கண்டித்து புதுச்சேரியில் நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இது குறித்து சத்தியம் மக்கள் சேவை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈழத் தமிழர்களை முற்றிலும் அழித்தொழிக்கும் நோக்கோடு சிங்கள இனவெறி அரசு நடத்தி வரும் தமிழின அழிப்புப் போருக்கு இந்திய அரசு உதவுவது படுபாதகச் செயலாகும்.
இந்திய அரசின் இப்போக்கைக் கண்டிக்கும் வகையிலும், சிங்கள இனவெறி அரசின் தமிழின அழிப்புப் போரை உடனே நிறுத்துமாறு வலியுறுத்தியும், தமிழீழ மக்களின் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தை அங்கீகரிக்குமாறும் கோரிக்கை விடுத்து நாளை (15ம் தேதி) புதுச்சேரி சாரம் ஜீவானந்தம் சிலை அருகில் கண்டன உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.
இப்போராட்டத்திற்கு தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் ஆசிரியர் குழு உறுப்பினர் க.அருணபாரதி தலைமை தாங்குகிறார். சத்தியம் மக்கள் சேவை மையத்தின் நிறுவனத் தலைவர் தே.சத்தியமூர்த்தி முன்னிலை வகிக்கிறார். அவைத் தலைவர் தே.சரவணன் உண்ணாப் போராட்டத்தைத் தொடங்கி வைத்து பேசுகிறார்.
சத்தியம் மக்கள் சேவை மையத்தின் செயலாளர் சசிகலா ஆறுமுகம், துணைச் செயலாளர் க.ஆனந்த், பொருளாளர் தே.சந்தோஷ் உள்ளிட்ட இயக்க நிர்வாகிகளும், பல்வேறு பள்ளி, கல்லூரி மாணவர்கள், சமூக நல இயக்கங்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலரும் கண்டன உரை நிகழ்த்துகின்றனர் என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: 9362141055, 9841949462
இணையம்: http://sathiyapuratchi.blogspot.com
நன்றி
http://thatstamil.oneindia.in/news/2009/02/14/tn-tamils-to-go-on-fast-puducherry-against-centre.html
Showing posts with label உண்ணாவிரதப் போராட்டம். Show all posts
Showing posts with label உண்ணாவிரதப் போராட்டம். Show all posts
Saturday, February 14, 2009
புதுச்சேரி-மத்திய அரசுக்கு எதிராக நாளை உண்ணாவிரதம்
Posted by
புதுவைக்குயில் பாசறை
at
1:31 PM
0
comments
Labels: உண்ணாவிரதப் போராட்டம்
Subscribe to:
Posts (Atom)
சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு