வருக வணக்கம்

Friday, February 20, 2009

தமிழ்வேந்தன் இறுதி ஊர்வலத்தில் கல்வீச்சு கலவரம்:போலீஸ் தடியடி



கடலூரில் ஈழத்தமிழர்களுக்காக தீக்குளித்து இறந்த தமிழ்வேந்தனின் இறுதி ஊர்வலம் இன்று மாலை 6.45க்கு தொடங்கியது.


தமிழ்வேந்தன் வசித்த வண்டிப்பாளையம் குழந்தை காலணி பகுதியில் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள உள்ள சுடுகாட்டுக்கு இந்த இறுதி ஊர்வலம் செல்கிறது.

இந்த ஊர்வலத்தில் அசம்பாவிதம் ஏற்படாத வகையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஊர்வலத்தின் வழிநெடுகிலும் கார் மற்றும் டூவீலர்களை அடித்து உடைத்ததால் போலீசார் தடியடி நடத்துகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் கற்களை வீசியபடியே உள்ளனர்.

இந்தக்கலவரம் 20 நிமிடங்களாக நடக்கின்றது. நிலைமை இன்னும் கட்டுக்குள் வரவில்லை.

நன்றி
நக்கீரன்

No comments:

சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

மனதை மயக்கும் பழையபாடல்