வருக வணக்கம்

Wednesday, February 18, 2009

புதுச்சேரி மாநிலம் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் மாபெரும் மனித சங்கிலி அறப்போராட்டம்







ஈழத்தமிழர் படுகொலையை கண்டித்தும் இலங்கையில் தமிழர்கள் மீதான போரை நிறுத்தக்கோரியும் புதுச்சேரி மாநிலம் இலங்கைத்தமிழர் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் மாபெரும் மனித சங்கிலி அறப்போராட்டம் நடைபெற்றது.

நேற்று (17.02.2009) மாலை 4.00 மணி முதல் 6.00 வரை பெருந்திரளான மக்கள் ஆதரவோடு புதுவையின் பிரதான சாலை எங்கும் எழுச்சியுர நடைபெற்றது. இந்நிகழ்வில் கட்சிகளை கடந்து தமிழின உணர்வாளர்கள் மாணவர்கள் மற்றும் அனைத்து தரப்பு பொதுமக்களும் ஆயிரக்கணக்கில் பங்கெடுத்து இலங்கைப்போரை உடனே தடுத்துநிறுத்தக்கோரியும், இந்திய அரசின் இராணுவ உதவியை திரும்பப்பெற கோரியும் வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

இலங்கைத்தமிழர் பாதுகாப்பு அமைப்பின் பொறுப்பாளர்கள் அனைவரும் பல்வேறு பகுதியில் பங்கெடுத்துக்கொண்டபடி புதுவை- கனகசெட்டிக்குளம் தொடங்கி கன்னியக்கோயில் வரை நீண்டிருந்த இந்த மனித சங்கிலியில் பா.ம.க., ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைககள், இந்திய பொதுவுடைமைக் கட்சி உட்பட பல்வேறு தமிழ் அமைப்பினரும் பங்கெடுத்தனர்.

No comments:

சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

மனதை மயக்கும் பழையபாடல்