வருக வணக்கம்

Sunday, February 22, 2009

வெள்ளை மாளிகையில் குவிந்த தமிழ் மக்கள்







அமெரிகாவின் அதிபர் மாளிகை அமைந்துள்ள வெள்ளை மாளிகையை அண்டியுள்ள திடலில் குவிந்த இருபத்தையாயிரத்துக்குமதிகமான தமிழ் மக்கள் சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்படும் தமிழ இனப்படுகொலையை நிறுத்துமாறு வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்க தலைநகர் வோசிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகை முன்பாகவும் வெளியுறவுத்துறை இராஜாங்க செயலகம் முன்பாகவும் நேற்று வெள்ளிக்கிழமை காலை பதினொருமணியிலிருந்து உறைய வைக்கும் பனியில் 25 ஆயிரம் வரையான தமிழர்கள் திரண்டிருந்தனர். பயங்கரவாதத்தின் பேரால் சிறிலங்கா அரசு முன்னெடுக்கும் தமிழினப் படுகொலைப்போரை நிறுத்தி வன்னி மக்களை காப்பற்றுமாறு அமெரிக்க அரசாங்கத்திடம் கோரினர்.


அமெரிக்கா மற்றும் கனடாவில் இருந்து ஏறக்குறைய 17,000 முதல் 20,000 வரையான தமிழர்கள் இந்தப் பேரணியில் பங்கேற்று - தமிழ் இனப் படுகொலையை தடுத்து நிறுத்துமாறு அரச தலைவர் ஒபாமா அவர்களையும், செயலர் ஹிலாறி கிளின்டன் அம்மையாரையும் கோரும் முழக்கங்களை எழுப்பினர்.

கனடாவிலருந்து 15,000 வரையிலான தமிழர்கள் ரொறன்ரோ ,வின்சர் ,ஒட்டாவா, மொன்றியல் ,கமில்ரன் , லண்டன் - ஒன்ராறியோ போன்ற நகரங்களிலிருந்து அமெரிக்காவின் 3 பிரதான் எலலைகளை கடந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 75 க்குமதிகமான பேருந்துகளிலிலும் 600 க்குமதிகமான தனியார் சிற்றுந்துகளும் 8 மணித்தியாலயங்களினுள் அமெரிக்க எல்லையினுடு வோசிங்ரன் போவதாக கூறி சென்றிருந்ததாக அமெரிக்க குடிவரவு மற்றும் எல்லை போக்குவரவுகண்காணிப்புப்பணி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவரால் சுமார் 500 வரையிலான தமிழ் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆழைத்துச்செல்லப்பட்டு வெள்ளைமாளிகையின் மிகவும் அண்மித்தபகுதிகளில் கோசங்களை எழுப்பியவாறு பேரணி நடாத்த அனுமதி கொடுத்திருந்தார்.



வன்னியில் நடக்கும் தமிழர் படுகொலையின் கோரக் காட்சிகள் கொண்ட படங்களைத் தாங்கியிருந்து பேரணியாளர்கள் -"இது சுத்தமான ஒரு இனப்படுகொலையே தான், இந்த போரை நிறுத்தி தமிழர்களைக் காப்பாற்றுங்கள்" என அமெரிக்க அரச தலைவரிடம் கோரிக்கைகளை எழுப்பினர்.

'பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற கொள்கையை தமிழினப் படுகொலை செய்வதற்கான ஒரு சாட்டாகவே சிறிலங்கா அரசு உபயோகிக்கின்றது என்ற கருத்தை பேரணியாளர்கள் வற்புறுத்தினர்.

தமிழீழ தேசியக் கொடிகளை தாங்கியிருந்த தமிழர்கள் - "விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் எமது சுதந்திரப் போராளிகள்" என முழக்கங்களை எழுப்பியதுடன் -"புலிகள் மீதான தடையை நீக்குங்கள்" என்று கோரும் அட்டைகளையும் தாங்கியிருந்தனர்.

பேரணியின் முடிவில் - அரச தலைவர் ஒபாமா அவர்களுக்கும், ஹிலறி கிளின்டன் அம்மையார் அவர்களுக்கும் வழங்கப்பட்ட மனு கடிதத்தில் - போர் நிறுத்தப்பட வேண்டிய உடனடித் தேவை வலியுறுத்தப்பட்டதுடன், நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டிய அவசியமும் எடுத்து விளக்கப்பட்டது.

நன்றி
செய்தி.காம்

No comments:

சுயமரியாதை :
தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

மனதை மயக்கும் பழையபாடல்