
இலங்கை தமிழருக்கு ஆதரவாக
புதுவைக்குயில்கையெழத்து இயக்கம்
புதுச்சேரி, ஜீன் 7:
சிங்கள அரசுக்கு எதிராக புதுவைக்குயில் பாசறை
கையெழத்து இயக்கம் நடத்தியது.செந்தமிழர் இயக்கத்தை சேர்ந்த ந.மு.தமிழ்மணி,
மீனவர்வேங்கைகள் மங்கையர்செல்வம்,
மதிமுக செல்வராசு, தமிழின தொண்டியக்கம் செழியன்
ஆகியோர் பொதுமக்களிடம்கையெழத்துக்களை பெற்றனர்
கையெழத்து இயக்கம் நடத்தியவர்கள் கூறியதாவது:
5 லட்சம் தமிழர்களை பட்டினி சாவிற்கு
சிங்ங்கள அரசு தள்ளியுள்ளது. இதற்கு இந்திய குடியரசு தலைவர்
மற்றும் பிரதமர் ஆகியோர் இந்த கொடுமைக்கு முடிவு
கட்டும் விதமாக புதுவைக்குயில் பாசறையின் சார்பில்
இந்த கையெழத்து இயக்கம் நடத்தப்படுகிறது.
தமிழர்களின் உணர்வை வெளிப்படுத்தும் விதமாகதமிழின
ஆதரவு கூட்டமைப்பு தலைவர் ஐயா பழநெடுமாறனின்
வேண்டுகோளுக்கிணங்க இந்த கையெழத்துஇயக்கத்தை
நடத்துகிறோம். இலங்கை அரசின் வன்செயலை இந்தியா
உடனடியாக தலையிட்டு தீர்க்க வேண்டும்.
இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்யக்கூடாது.
இலங்கை தமிழர்களுக்கு தேவையான உணவு மற்றும்
மருந்துபொருட்களை தடையின்றி கிடைக்க
ஆவன செய்ய வேண்டும் போன்ற
கோரிக்கைகளை பொதுமக்கள் கையெழத்துடன்சேர்த்து
இந்திய அரசுக்கு அனுப்புவதாக கூறினார்கள்.
நன்றி: தினகரன் நாளிதழ் 07.06.2007.
No comments:
Post a Comment